Monday, March 4, 2013

எனக்கான இடத்தை விட்டு தராமல் 
உனக்கான இடத்தை கேட்டு பெறாமல் 
நம்மை நாமே தொலைத்து விட்டோம் 

விடிகிற வரைக்கும் தேடிவிட்டோம் 
விடிந்த பின்பு மறந்து விட்டோம் 
அடுத்த இரவுக்கு காத்திருந்தோம் 

விடியும் வரை அழுதோம்
விடிந்த பின் மறந்தோம் - நம்மை 
மறந்ததாய் நாமே நடித்தோம்

இரவுக்கும் தெரியும் தேடல் 
முடிவதில்லை என்று -நமக்கும் தெரியும் 
நாம் கிடைப்பதில்லை என்று 

 உனக்கான வலிகள் கூட 
 சுகமாய் இனிக்கிறது - எனக்கான 
 இனிப்புகள் நீ இன்றி கசக்கிறது

1 comment:

  1. Vegu nattkal kazhithu... Azhagana varigalai padikiren... Wonderful lines

    ReplyDelete