எனக்கான இடத்தை விட்டு தராமல்
உனக்கான இடத்தை கேட்டு பெறாமல்
நம்மை நாமே தொலைத்து விட்டோம்
விடிகிற வரைக்கும் தேடிவிட்டோம்
விடிந்த பின்பு மறந்து விட்டோம்
அடுத்த இரவுக்கு காத்திருந்தோம்
விடியும் வரை அழுதோம்
விடிந்த பின் மறந்தோம் - நம்மை
மறந்ததாய் நாமே நடித்தோம்
இரவுக்கும் தெரியும் தேடல்
முடிவதில்லை என்று -நமக்கும் தெரியும்
நாம் கிடைப்பதில்லை என்று
உனக்கான வலிகள் கூட
சுகமாய் இனிக்கிறது - எனக்கான
இனிப்புகள் நீ இன்றி கசக்கிறது
உனக்கான இடத்தை கேட்டு பெறாமல்
நம்மை நாமே தொலைத்து விட்டோம்
விடிகிற வரைக்கும் தேடிவிட்டோம்
விடிந்த பின்பு மறந்து விட்டோம்
அடுத்த இரவுக்கு காத்திருந்தோம்
விடியும் வரை அழுதோம்
விடிந்த பின் மறந்தோம் - நம்மை
மறந்ததாய் நாமே நடித்தோம்
இரவுக்கும் தெரியும் தேடல்
முடிவதில்லை என்று -நமக்கும் தெரியும்
நாம் கிடைப்பதில்லை என்று
உனக்கான வலிகள் கூட
சுகமாய் இனிக்கிறது - எனக்கான
இனிப்புகள் நீ இன்றி கசக்கிறது
Vegu nattkal kazhithu... Azhagana varigalai padikiren... Wonderful lines
ReplyDelete