இதயத்தை திருடும் உன்
இயல்பான சிரிப்பு
மறக்க நினைத்தாலும் மரித்துவிடுகிறேன்
தேவதையா நீ மோகினியா
இரவு தூக்கத்தில்
தினம் என்னை இம்சிக்கிறாய்
பிரிவா பரிவா
எதைஅடி நீ சொல்கிறாய்
புரியா கணிதமாய் உன் கண்கள்
நொடிககளும் நிமிடங்களுமாய்
கடந்த என் பகல் பொழுது
இரவில் மட்டும் யுகமாய் தொடர்கிறது
வாழ்வின் கடைசி நொடியாய்
இன்றே வாழ்ந்திட மனம் துடிக்கிறது
இரவின் எச்சங்களாய் தொடர்ந்து
இம்சிக்கும் நட்சத்திரங்கள் உனை
பார்த்ததும் கண்சிமிட்டி கரைகிறதே
Tuesday, December 7, 2010
Saturday, December 4, 2010
என் தேடல்கள்
மழை விட்ட மரங்களில்
முளைக்கும் சிறு நீர் துளிகளாய்
தொலைத்த நினைவுகளோடு
தனிமையில் ஓர் பயணம்
யாருக்கும் சொந்தமின்றி
காற்றில் ஒரு கானம்
ஏனோ என்னை தழுவுகையில்
கண்ணில் சிறு ஈரம்
காரணங்கள் தெரியாத காரியங்கள்
விடை தெரியாத சில விடியல்கள்
தெரிந்தும் புரியாமல் சில வேளைகள்
புரிந்தும் தெரியாமலும் சில வேளைகள்
நினைவுகளும் தூரமாகி போன வேளை
நிமிடங்கள் மட்டும் சொந்தமகுமோ?
நிஜங்களும் விலகி போன வேளை
நிழல்கள் மட்டும் தொடருமோ?
விடை தெரியாத இரவுகளும்
விடிய மறுக்கும் பகல்களும்
நீண்ட நெடிய பாதைகளும்
கண நேரமும் சுமையாகி போனது
தேடல் என்பது முடிவுறா பயணம்
நிஜங்கள் வேண்டாம் என்றும் -
அதன் நினைவுகள் போதும்
தொடரும் என் தேடல்கள்
முளைக்கும் சிறு நீர் துளிகளாய்
தொலைத்த நினைவுகளோடு
தனிமையில் ஓர் பயணம்
யாருக்கும் சொந்தமின்றி
காற்றில் ஒரு கானம்
ஏனோ என்னை தழுவுகையில்
கண்ணில் சிறு ஈரம்
காரணங்கள் தெரியாத காரியங்கள்
விடை தெரியாத சில விடியல்கள்
தெரிந்தும் புரியாமல் சில வேளைகள்
புரிந்தும் தெரியாமலும் சில வேளைகள்
நினைவுகளும் தூரமாகி போன வேளை
நிமிடங்கள் மட்டும் சொந்தமகுமோ?
நிஜங்களும் விலகி போன வேளை
நிழல்கள் மட்டும் தொடருமோ?
விடை தெரியாத இரவுகளும்
விடிய மறுக்கும் பகல்களும்
நீண்ட நெடிய பாதைகளும்
கண நேரமும் சுமையாகி போனது
தேடல் என்பது முடிவுறா பயணம்
நிஜங்கள் வேண்டாம் என்றும் -
அதன் நினைவுகள் போதும்
தொடரும் என் தேடல்கள்
முடிவு
முத்தங்களின் ஈரம் காயவில்லை இன்னும்
பேசிய வார்த்தைகள் கரையவில்லை இன்னும்
அணைப்பின் பிடி தளரவில்லை இன்னும்
எனக்காய் உன்னிடம் ஒரு சுமையும்
உனக்காய் என்னிடம் ஒரு இடமும்
நிரப்பபடாமல் இன்னும்
சொல்லபடாத வார்த்தைகளுடன்
எழுதப்படாத வாக்கியங்களுடன்
முற்று பெறாத ஓர் கவிதை
நமக்காய் நமக்கான காதலை
சுகமாய் தொடர்ந்த நம் பயணம்
இதோ ஜனிக்கிறது அதன் மரணம்
பேசிய வார்த்தைகள் கரையவில்லை இன்னும்
அணைப்பின் பிடி தளரவில்லை இன்னும்
எனக்காய் உன்னிடம் ஒரு சுமையும்
உனக்காய் என்னிடம் ஒரு இடமும்
நிரப்பபடாமல் இன்னும்
சொல்லபடாத வார்த்தைகளுடன்
எழுதப்படாத வாக்கியங்களுடன்
முற்று பெறாத ஓர் கவிதை
நமக்காய் நமக்கான காதலை
சுகமாய் தொடர்ந்த நம் பயணம்
இதோ ஜனிக்கிறது அதன் மரணம்
Subscribe to:
Posts (Atom)