இதயத்தை திருடும் உன்
இயல்பான சிரிப்பு
மறக்க நினைத்தாலும் மரித்துவிடுகிறேன்
தேவதையா நீ மோகினியா
இரவு தூக்கத்தில்
தினம் என்னை இம்சிக்கிறாய்
பிரிவா பரிவா
எதைஅடி நீ சொல்கிறாய்
புரியா கணிதமாய் உன் கண்கள்
நொடிககளும் நிமிடங்களுமாய்
கடந்த என் பகல் பொழுது
இரவில் மட்டும் யுகமாய் தொடர்கிறது
வாழ்வின் கடைசி நொடியாய்
இன்றே வாழ்ந்திட மனம் துடிக்கிறது
இரவின் எச்சங்களாய் தொடர்ந்து
இம்சிக்கும் நட்சத்திரங்கள் உனை
பார்த்ததும் கண்சிமிட்டி கரைகிறதே
No comments:
Post a Comment